கலையும் கனவுகள்

Share

அன்று விடுமுறை நாள்
அதிகாலை பனிக்காற்று
மெல்லிய மழைச்சாரல்
நீண்ட நெடிய தார் சாலையில்
தனிமையில் கைகோர்த்தபடி நாம்…

தெருவோர டீக்கடை
நுரை நிரம்பிய குவளையில்
இதமான சூட்டில் தேநீருடன்
என் தோளில் சாய்ந்தபடி நீ
இமை மூடியபடி கனவில் நான்

சட்டென விழித்து கடிகாரம் பார்த்தேன்
முள் நான்கை நெருங்கியது.
இனிதான விடியலில் வந்த
கனவு தானா இது?

By: Thivya Kulendran

Image Link: https://pin.it/71mW1bj

 
Tagged : /